உடுப்பி கணேஷ் பவன்
கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி ஸ்ரீ கணேச பவன் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் புதிய ஊரடங்கு உத்தரவால் இங்கு வேலை செய்து வந்த ஊழியர்களை நிறுத்திவிட்டு, ஒரு சில ஊழியர்களை கொண்டு பார்சல் சேவை மட்டுமே வழங்குகின்றனர். மேலும் இந்த பார்சல் சேவையால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் அமர்ந்து சாப்பிடவே விரும்புவார்கள், என்று உரிமையாளர் தெரிவிக்கிறார்.
அருகிலேயே ஒமேகா பேக்கரி என்ற கடை நடத்திவருபவர் கடந்த வருடம் எங்களுக்கு வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் அதனால் குடும்ப தேவையை சமாளிக்க கூடுதலாக ஒரு வியாபாரம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
இதேபோல் அருகில் உள்ள பல கடைகளில் நாம் விசாரித்த போது, இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வியாபாரம் செய்வோர் கூறுகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…