ஊரடங்கு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கலக்கம்.

கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி ஸ்ரீ கணேச பவன் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் புதிய ஊரடங்கு உத்தரவால் இங்கு வேலை செய்து வந்த ஊழியர்களை நிறுத்திவிட்டு, ஒரு சில ஊழியர்களை கொண்டு பார்சல் சேவை மட்டுமே வழங்குகின்றனர். மேலும் இந்த பார்சல் சேவையால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் அமர்ந்து சாப்பிடவே விரும்புவார்கள், என்று உரிமையாளர் தெரிவிக்கிறார்.

அருகிலேயே ஒமேகா பேக்கரி என்ற கடை நடத்திவருபவர் கடந்த வருடம் எங்களுக்கு வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் அதனால் குடும்ப தேவையை சமாளிக்க கூடுதலாக ஒரு வியாபாரம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

இதேபோல் அருகில் உள்ள பல கடைகளில் நாம் விசாரித்த போது, இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வியாபாரம் செய்வோர் கூறுகின்றனர்.

உடுப்பி கணேஷ் பவன்
admin

Recent Posts

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

21 hours ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

1 day ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

1 day ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

1 day ago

அக்னி நட்சத்திரத்துடன் தொடர்புடைய இந்த கோவிலுக்கு விழாவின் இறுதி நிகழ்வாக காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்.

கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…

4 days ago