கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர்.

இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் முதல் முதலாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம்வந்தது. பங்குனி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கிராம தேவதை பூஜை நேற்று மதியம் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்பு இரவு விநாயகர் உற்சவம் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

7 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago