பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். எங்கு தெரியுமா?

தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் மயிலாப்பூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களை வாங்க மக்கள் பொருட்கள் வழங்கும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜனவரி 11ம் தேதி காலை 8 மணியிலிருந்து மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகே இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் . இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. மேலும் இந்த பொங்கல் பரிசு வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

புகைப்படம்: பொங்கல் பரிசு பொருட்கள் பெற்ற பெண்கள், இடம் : அபிராமபுரம் நியாய விலை கடை.

Verified by ExactMetrics