மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம்.
சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில் தடுப்பூசி வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு விசாரித்த போது, இந்த இரண்டு இடங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வாக்குப்பதிவு நாளை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அதிகளவு வந்ததாக தெரிவித்தனர். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 150 நபர்கள் வருவதாகவும், சில நாட்களில் 200 நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சாந்தோம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், ஆனால் இங்கேயும் அதிகமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒருநாள் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தால் அன்று மீதமுள்ள தடுப்பூசிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்து சென்று பயன்படுத்தப்படும். ஆகவே தடுப்பூசி எங்கேயும் எப்போதும் வீணாவதில்லை என்று தெரிவிக்கின்றனர். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு காலை 9.30 மணியளவில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…