மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம்.
சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில் தடுப்பூசி வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு விசாரித்த போது, இந்த இரண்டு இடங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வாக்குப்பதிவு நாளை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அதிகளவு வந்ததாக தெரிவித்தனர். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 150 நபர்கள் வருவதாகவும், சில நாட்களில் 200 நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சாந்தோம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், ஆனால் இங்கேயும் அதிகமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒருநாள் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தால் அன்று மீதமுள்ள தடுப்பூசிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்து சென்று பயன்படுத்தப்படும். ஆகவே தடுப்பூசி எங்கேயும் எப்போதும் வீணாவதில்லை என்று தெரிவிக்கின்றனர். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு காலை 9.30 மணியளவில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…