மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம்.

சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில் தடுப்பூசி வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு விசாரித்த போது, இந்த இரண்டு இடங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வாக்குப்பதிவு நாளை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அதிகளவு வந்ததாக தெரிவித்தனர். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 150 நபர்கள் வருவதாகவும், சில நாட்களில் 200 நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சாந்தோம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், ஆனால் இங்கேயும் அதிகமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒருநாள் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தால் அன்று மீதமுள்ள தடுப்பூசிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்து சென்று பயன்படுத்தப்படும். ஆகவே தடுப்பூசி எங்கேயும் எப்போதும் வீணாவதில்லை என்று தெரிவிக்கின்றனர். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு காலை 9.30 மணியளவில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago