ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆர்.கே. நகர் மக்கள் சேர்ந்து நடத்துகின்றனர். இந்த விழாவில் கோலப்போட்டி, கச்சேரிகள் நடைபெறவுள்ளது, மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் தெருவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆர். கே. நகர் மக்கள் மட்டுமில்லாமல் அருகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கலந்துகொள்ளலாம்.
ஆர். கே. நகரில் வசிக்கும் மக்கள் கடந்த பல வருடங்களாக தெருக்களை தூய்மையாக வைத்திருப்பதிலும், மற்றும் சாலைகளில் மரங்களை நட்டு பசுமையாக வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கின்றனர். அதேபோன்று பொங்கல் விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…