பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், அவர்களின் தேர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும் என்று இந்த பள்ளி கருதுகிறது.

இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.

ஆர்.ஏ.புரம், மாதா சர்ச் சாலையில் செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பாலும் படிக்கும் மாணவர்கள் ஏழை மாணவர்களே. இங்கு தினமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜாகுலின் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகம் இருந்தபோதிலும், அது இப்போது குறைந்து காணப்படுகிறதென்றும், இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து திரும்ப பாடங்களை நடத்தாமல் இருந்தால் அவர்களின் தேர்ச்சி விகிதம் சரியாக இருக்காது என்றும் கூறுகிறார். மேலும் இந்த பள்ளியில் சுமார் முந்நூறு மாணவிகளுக்கு மேல் 10 மற்றும் 12ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் பாடம் சமூக இடைவெளியை பின்பற்றி பாடம் நடத்த வகுப்பறைகள் உள்ளது. ஆனால் சில பெற்றோர் அவ்வாறு பாடம் நடத்தும்போது மாணவர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பிருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago