பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், அவர்களின் தேர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும் என்று இந்த பள்ளி கருதுகிறது.

இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.

ஆர்.ஏ.புரம், மாதா சர்ச் சாலையில் செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பாலும் படிக்கும் மாணவர்கள் ஏழை மாணவர்களே. இங்கு தினமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜாகுலின் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகம் இருந்தபோதிலும், அது இப்போது குறைந்து காணப்படுகிறதென்றும், இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து திரும்ப பாடங்களை நடத்தாமல் இருந்தால் அவர்களின் தேர்ச்சி விகிதம் சரியாக இருக்காது என்றும் கூறுகிறார். மேலும் இந்த பள்ளியில் சுமார் முந்நூறு மாணவிகளுக்கு மேல் 10 மற்றும் 12ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் பாடம் சமூக இடைவெளியை பின்பற்றி பாடம் நடத்த வகுப்பறைகள் உள்ளது. ஆனால் சில பெற்றோர் அவ்வாறு பாடம் நடத்தும்போது மாணவர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பிருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago