ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆர்.கே. நகர் மக்கள் சேர்ந்து நடத்துகின்றனர். இந்த விழாவில் கோலப்போட்டி, கச்சேரிகள் நடைபெறவுள்ளது, மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் தெருவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆர். கே. நகர் மக்கள் மட்டுமில்லாமல் அருகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கலந்துகொள்ளலாம்.
ஆர். கே. நகரில் வசிக்கும் மக்கள் கடந்த பல வருடங்களாக தெருக்களை தூய்மையாக வைத்திருப்பதிலும், மற்றும் சாலைகளில் மரங்களை நட்டு பசுமையாக வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கின்றனர். அதேபோன்று பொங்கல் விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…