தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து செல்வர். நீங்கள் அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். 12D விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். தபால் ஓட்டை செலுத்தியவர்கள் திரும்ப ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் குப்பம் பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பகுதி வாரியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago