சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிகிறது. இன்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9 மணிக்கு கோவாக்சின் மருந்து இருப்பு இருந்தது தேவைப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் அது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். யாரெல்லாம் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுக்க வருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து தடுப்பூசி போடும் மையங்களிலும் தடுப்பூசி இருப்பு நிலவரம் தினமும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிய வரும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…