தமிழக அரசின் ஆணைப்படி நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்திருந்தனர். பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முகக்கவசம் அணிந்து வராத மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.
ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் உள்ள மேசைகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. அந்த மேசைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இது போன்று சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு பள்ளி மாணவிகளின் பேண்டு இசை நிகழ்சியுடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர். மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூச்செண்டு வழங்கினர்.
மயிலாப்பூர் ஆர்.கே. மட சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்பிணர்வு இருப்பதாக தலைமை ஆசிரியர் கலா தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறையில் முகக்கவசம் அணிந்து பாடம் எடுக்க சிரமம் ஏற்பட்டால், திறந்த வெளியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…