முழு ஊரடங்கு காரணமாக மெரினா அருகே கடல் உணவுகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவு.

மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் இது போன்ற உணவகங்களுக்கு எப்போதும் மிகுந்த வரவேற்பு உண்டு. மீன்கறி, மீன்குழம்பு, போன்ற உணவுகள் இந்த உணவகங்களின் சிறப்பு. வழக்கமாக மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு சாப்பிட வருவர். ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இந்த உணவகங்கள் சிறிய அளவில் (பார்சல் சேவை மட்டும்) அவர்கள் காலனி பகுதிகளுக்குள்ளேயே நடத்தி வந்தனர். வியாபாரமும் குறைந்தளவிலேயே இருந்தது. இப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை மூடுமாறு கூறியதால் சிறிய உணவகங்களும் இப்போது மூடப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics