Categories: சமூகம்

வைரஸ் பாதிப்புக்குள்ளான மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வரும் தன்னார்வ குழுவிற்கு ஒரு பெரிய நன்கொடையை ஒரு மூத்த குடிமகன் வழங்கியுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர். இந்த தன்னார்வ குழுவினர் ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் முதல் ஏழு நபர்களுக்கு உணவை விநியோகம் செய்து வருகின்றனர். உணவை தயார் செய்ய ஒரு சமையலரை பணியமர்த்தியுள்ளனர். இந்த செய்தியை மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கை மூலம் அறிந்த, பஜார் சாலையில் வசித்து வரும் ஒரு பெரியவர் இந்த தன்னார்வ குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி ரூ.10001 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தன்னார்வ குழுவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்.
வசந்த் : 9566146768 மற்றும் பிரசன்னா : 9500167977

admin

Recent Posts

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

1 day ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

2 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

3 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

5 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

6 days ago