அடையார் ஆற்றில் திறமைகளை வெளிப்படுத்திய படகோட்டிகள்

அடையாறு ஆற்றின் கிழக்கு பகுதியில் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற படகோட்டிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஆற்றில் படகோட்டினர். மெட்ராஸ் போட் கிளப் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் முதன்முறையாக நடைபெறும் தேசிய படகு போட்டியில் (மூத்தோர் மற்றும் ஜூனியர்) பங்கேற்க உள்ள மாநில அணியில் இடம்பிடிப்பதற்காக இந்த படகோட்டிகள் ஆற்றில் படகோட்டினர்.

குழுவால் தேர்வு செய்யப்பட்ட பின் தீவிரமான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ்நாடு அமெச்சூர் ரோயிங் அசோசியேஷன் தலைவர் பாலாஜி, “இது ஜம்மு காஷ்மீரில் பிஸியான சீசன், எங்கள் குழு தமிழ்நாடு அணிக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதே சிறந்தது.”என்று கூறுகிறார்.

புகைப்படம்: காயத்ரீ கிருஷ்ணா

Verified by ExactMetrics