மெட்ராஸ் தின விழாவையொட்டி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது.
லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் நடைபெற்ற இந்த வினாடி வினாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது; பல ஆண்டுகளாக ஆகஸ்டு மாதத்தில் இது நடந்து வருகிறது.
எஸ்.பிரவீனா மற்றும் வி.நந்தினி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள்
இரண்டாம் பரிசு ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளி; மாணவிகள் V. இளவரசி மற்றும் D. தீபிகா.
மூன்றாம் பரிசை ராஜா முத்தையா பள்ளி, டி.ஆண்ட்ரூ, எம்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். சாந்தோம் பள்ளியின் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் ஆரம்ப சுற்றில் பங்கேற்றதை அடுத்து இந்த நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வினாடி வினா போட்டியை ரேவதி ஆர் நடத்தினார்.
வினாக்கள் அனைத்தும் சென்னை சம்பந்தமாகவே கேட்கப்பட்டது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…