தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது

மெட்ராஸ் தின விழாவையொட்டி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது.

லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் நடைபெற்ற இந்த வினாடி வினாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது; பல ஆண்டுகளாக ஆகஸ்டு மாதத்தில் இது நடந்து வருகிறது.

எஸ்.பிரவீனா மற்றும் வி.நந்தினி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள்

இரண்டாம் பரிசு ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளி; மாணவிகள் V. இளவரசி மற்றும் D. தீபிகா.

மூன்றாம் பரிசை ராஜா முத்தையா பள்ளி, டி.ஆண்ட்ரூ, எம்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். சாந்தோம் பள்ளியின் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.

அனைத்து பங்கேற்பாளர்களும் ஆரம்ப சுற்றில் பங்கேற்றதை அடுத்து இந்த நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வினாடி வினா போட்டியை ரேவதி ஆர் நடத்தினார்.

வினாக்கள் அனைத்தும் சென்னை சம்பந்தமாகவே கேட்கப்பட்டது.

Verified by ExactMetrics