ஆன்லைனில் சஞ்சய் சுப்ரமணியனின் ‘தமிழும் நானும்’ இசை கச்சேரி டிசம்பர் 12ல் நடைபெறுகிறது

கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால் ‘தமிழும் நானும்’ என்னும் தலைப்பில் வழங்கப்படும் இந்த கச்சேரியில் சஞ்சய் அவர்கள் அனைத்து பாடல்களையும் தமிழிலேயே பாடுவார்.  தமிழில் அறிமுகம் இல்லாத மியூசிக் கம்போசர்களின் பாடல்களை பாட உள்ளார். இந்த கச்சேரியை கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த வருடம் கோவிட் 19 காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ஆன்லைனில் வெப்ஸ்ட்ரீமிங் செய்கிறார். வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை கச்சேரியில் பங்கேற்க ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய முகவரி : https://tamizhumnaanum.eventvirtually.com

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

1 day ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

6 days ago