மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்காக நடத்தப்படுகிறது.

கற்பகாம்பாள் மயிலாக வடிவெடுத்து சிவபெருமானை தரிசித்ததால் இத்தலத்திற்கு திருமயிலை என்று பெயரிடப்பட்டது.

தைப்பூச தெப்பத் திருவிழாவானது வரும் ஜனவரி 25 வியாழக்கிழமை மாலை தொடங்க உள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இத்தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் முதல் நாளில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் இணைந்து தெப்பத்தில் வலம் வருவார்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வருவார். குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் கூட நிலத்தெப்பம் என்று ஒன்று நடந்திருக்கிறது, இத்திருக்கோயில் என்று உருவானதோ அன்றிலிருந்து தெப்பமானது நடைபெற்று வருகிறது.

செய்தி: இலக்கியா பிரபு

admin

Recent Posts

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

2 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

18 hours ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

2 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

7 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

7 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

7 days ago