மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்காக நடத்தப்படுகிறது.

கற்பகாம்பாள் மயிலாக வடிவெடுத்து சிவபெருமானை தரிசித்ததால் இத்தலத்திற்கு திருமயிலை என்று பெயரிடப்பட்டது.

தைப்பூச தெப்பத் திருவிழாவானது வரும் ஜனவரி 25 வியாழக்கிழமை மாலை தொடங்க உள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இத்தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் முதல் நாளில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் இணைந்து தெப்பத்தில் வலம் வருவார்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வருவார். குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் கூட நிலத்தெப்பம் என்று ஒன்று நடந்திருக்கிறது, இத்திருக்கோயில் என்று உருவானதோ அன்றிலிருந்து தெப்பமானது நடைபெற்று வருகிறது.

செய்தி: இலக்கியா பிரபு

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

3 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago