மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்காக நடத்தப்படுகிறது.

கற்பகாம்பாள் மயிலாக வடிவெடுத்து சிவபெருமானை தரிசித்ததால் இத்தலத்திற்கு திருமயிலை என்று பெயரிடப்பட்டது.

தைப்பூச தெப்பத் திருவிழாவானது வரும் ஜனவரி 25 வியாழக்கிழமை மாலை தொடங்க உள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இத்தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் முதல் நாளில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் இணைந்து தெப்பத்தில் வலம் வருவார்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வருவார். குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் கூட நிலத்தெப்பம் என்று ஒன்று நடந்திருக்கிறது, இத்திருக்கோயில் என்று உருவானதோ அன்றிலிருந்து தெப்பமானது நடைபெற்று வருகிறது.

செய்தி: இலக்கியா பிரபு

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago