Food sharing project. Vector illustration of share meal, waste reduction, giving helping hand for the poor or refugees. Design for charity, volunteer organization. Handful of food. Template for flyer.
மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு வீட்டில் உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இது கடந்த 50 ஆண்டுகால குடும்ப நடைமுறையாகும்.
கடந்த ஆண்டு வித்யநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில், ஆதரவில்லாமல் தெருவில் இருந்தவர்களுக்கு உணவளித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமையல்காரர்களை கொண்டு சமைத்து மீண்டும் தெருவில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்தனர்.
வரிசையில் நின்ற மக்களுக்கு, இரண்டு உணவுப் பொட்டலங்களையும் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த சேவை செய்ய (உணவு பொட்டலங்கள் கட்டுவது) தன்னார்வலர்கள் உதவிபுரிவதாக வித்யநாதன் தெரிவிக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் நலம் விரும்பிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையிலிருந்து நிதி திரட்டப்படுகிறது சுமார் 500 பேருக்கு ஒரு நாள் மதிய உணவு செலவு ரூ. 5000. ஆகிறது.
மே மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவுள்ளோம்.
செய்தி : ஐஸ்வர்யா.ஆர்
மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…
மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக, கட்சியின் பொருளாளர் பி.…
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…