மத்தள நாராயணனன் தெருவில் உள்ள இந்த குழு ஊரடங்கு நாட்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிக்கிறது.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு வீட்டில் உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இது கடந்த 50 ஆண்டுகால குடும்ப நடைமுறையாகும்.

கடந்த ஆண்டு வித்யநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில், ஆதரவில்லாமல் தெருவில் இருந்தவர்களுக்கு உணவளித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமையல்காரர்களை கொண்டு சமைத்து மீண்டும் தெருவில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்தனர்.

வரிசையில் நின்ற மக்களுக்கு, இரண்டு உணவுப் பொட்டலங்களையும் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த சேவை செய்ய (உணவு பொட்டலங்கள் கட்டுவது) தன்னார்வலர்கள் உதவிபுரிவதாக வித்யநாதன் தெரிவிக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் நலம் விரும்பிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையிலிருந்து நிதி திரட்டப்படுகிறது சுமார் 500 பேருக்கு ஒரு நாள் மதிய உணவு செலவு ரூ. 5000. ஆகிறது.

மே மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவுள்ளோம்.

செய்தி : ஐஸ்வர்யா.ஆர்

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

5 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago