மத்தள நாராயணனன் தெருவில் உள்ள இந்த குழு ஊரடங்கு நாட்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிக்கிறது.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு வீட்டில் உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இது கடந்த 50 ஆண்டுகால குடும்ப நடைமுறையாகும்.

கடந்த ஆண்டு வித்யநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில், ஆதரவில்லாமல் தெருவில் இருந்தவர்களுக்கு உணவளித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமையல்காரர்களை கொண்டு சமைத்து மீண்டும் தெருவில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்தனர்.

வரிசையில் நின்ற மக்களுக்கு, இரண்டு உணவுப் பொட்டலங்களையும் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த சேவை செய்ய (உணவு பொட்டலங்கள் கட்டுவது) தன்னார்வலர்கள் உதவிபுரிவதாக வித்யநாதன் தெரிவிக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் நலம் விரும்பிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையிலிருந்து நிதி திரட்டப்படுகிறது சுமார் 500 பேருக்கு ஒரு நாள் மதிய உணவு செலவு ரூ. 5000. ஆகிறது.

மே மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவுள்ளோம்.

செய்தி : ஐஸ்வர்யா.ஆர்

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 week ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

4 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

4 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

4 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago