Food sharing project. Vector illustration of share meal, waste reduction, giving helping hand for the poor or refugees. Design for charity, volunteer organization. Handful of food. Template for flyer.
மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு வீட்டில் உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இது கடந்த 50 ஆண்டுகால குடும்ப நடைமுறையாகும்.
கடந்த ஆண்டு வித்யநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில், ஆதரவில்லாமல் தெருவில் இருந்தவர்களுக்கு உணவளித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமையல்காரர்களை கொண்டு சமைத்து மீண்டும் தெருவில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்தனர்.
வரிசையில் நின்ற மக்களுக்கு, இரண்டு உணவுப் பொட்டலங்களையும் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த சேவை செய்ய (உணவு பொட்டலங்கள் கட்டுவது) தன்னார்வலர்கள் உதவிபுரிவதாக வித்யநாதன் தெரிவிக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் நலம் விரும்பிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையிலிருந்து நிதி திரட்டப்படுகிறது சுமார் 500 பேருக்கு ஒரு நாள் மதிய உணவு செலவு ரூ. 5000. ஆகிறது.
மே மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவுள்ளோம்.
செய்தி : ஐஸ்வர்யா.ஆர்
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…