Vector Little girl attending to online school class I have used http://www.lib.utexas.edu/maps/world_maps/world_physical_2011_nov.pdf address as the reference to draw the basic map outlines with Adobe Illustrator CS5 software, other themes were created by myself. 11/11/2014
இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.
ஆர்.ஏ.புரம், மாதா சர்ச் சாலையில் செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பாலும் படிக்கும் மாணவர்கள் ஏழை மாணவர்களே. இங்கு தினமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜாகுலின் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகம் இருந்தபோதிலும், அது இப்போது குறைந்து காணப்படுகிறதென்றும், இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து திரும்ப பாடங்களை நடத்தாமல் இருந்தால் அவர்களின் தேர்ச்சி விகிதம் சரியாக இருக்காது என்றும் கூறுகிறார். மேலும் இந்த பள்ளியில் சுமார் முந்நூறு மாணவிகளுக்கு மேல் 10 மற்றும் 12ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் பாடம் சமூக இடைவெளியை பின்பற்றி பாடம் நடத்த வகுப்பறைகள் உள்ளது. ஆனால் சில பெற்றோர் அவ்வாறு பாடம் நடத்தும்போது மாணவர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பிருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…