மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கூட கவனிக்காத ஒரு விஷயத்தைக் கண்டார்.
தெருவில் சுற்றி திரியும் விலங்குகள், பறவைகள் தாகத்தை தணிக்க இந்த கோடையில் தெரு மூலைகளில் ப்ளூ கிராஸ் வைத்திருந்த பீங்கான் நீர் கிண்ணத்தை அவர் கவனித்தார்.
சமீபத்தில், தேஜஸ் கிண்ணத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே தெருவில் கட்டிட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியிடம் இதே போன்று சிமென்டில் செய்து தருமாறு கேட்டார் அந்த மேஸ்திரியும் இந்த சேவைக்கு ஒப்புக்கொண்டு இலவசமாக செய்து கொடுத்தார்.
இளைஞர் தேஜஸ் செய்த காரியம், மற்ற இளைஞர்களும் சேவை செய்ய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
<<செய்தி மற்றும் படம் பாஸ்கர் சேஷாத்ரி>>
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…