Categories: சமூகம்

இந்த இளைஞர் புத்திசாலி. தெரு நாய்கள் மற்றும் பறவைகளின் தாகத்தை தணிக்க உதவினார்.

மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கூட கவனிக்காத ஒரு விஷயத்தைக் கண்டார்.

தெருவில் சுற்றி திரியும் விலங்குகள், பறவைகள் தாகத்தை தணிக்க இந்த கோடையில் தெரு மூலைகளில் ப்ளூ கிராஸ் வைத்திருந்த பீங்கான் நீர் கிண்ணத்தை அவர் கவனித்தார்.

சமீபத்தில், தேஜஸ் கிண்ணத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே தெருவில் கட்டிட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியிடம் இதே போன்று சிமென்டில் செய்து தருமாறு கேட்டார் அந்த மேஸ்திரியும் இந்த சேவைக்கு ஒப்புக்கொண்டு இலவசமாக செய்து கொடுத்தார்.

இளைஞர் தேஜஸ் செய்த காரியம், மற்ற இளைஞர்களும் சேவை செய்ய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

<<செய்தி மற்றும் படம் பாஸ்கர் சேஷாத்ரி>>

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

5 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago