தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.
கிட் 1: ரூ.720. இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் ஆகியவை.
கிட் 2: ரூ.2880 இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் தவிர டைமர் டிவைசும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியூர் சென்றாலும் நம்முடைய மொபைல் வழியாக ட்ரிப் ஆன் செய்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இதற்க்கான செயல் விளக்க கையேடும் வழங்குகின்றனர்.
இது கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சிறந்த முறையாகும். மேற்கண்ட கிட்களுக்கு அரசு மானியமும் வழங்குகின்றனர். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் பெற திருவான்மியூரிலுள்ள ராஜீவனை தொடர்புகொள்ளவும் தொலைபேசி எண் : 98402 55347
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…