தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ஒன்று மந்தைவெளி தெருவிலும் (சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில) மற்றொன்று ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலை இ-சேவை மையத்திற்கு அருகிலும் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு இலவச சேவையாகும். இந்த மினி கிளினிக்கில் காய்ச்சல், தலைவலி, கை கால் வலி, சிறிய அளவிலான காயங்களுக்கு மருந்து போடுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் இங்குள்ள மருத்துவர் நோயாளிகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கிறார். தற்போதுவரை மயிலாப்பூரில் மூன்று கிளினிக்குகள் செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மினி கிளினிக்குகள் திறந்திருக்கும்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…