மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்பு வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் செய்ய விரும்பினார். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் பி.எஸ் பள்ளிக்கு எதிரே பழச்சாறு கடை தொடங்கி நடத்தி வந்தார்.
தற்போது உள்ள சூழ்நிலையால் இந்த தொழிலை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்தரும் அவருடைய நண்பரும் சேர்ந்து மயிலாப்பூரில் ‘We Care Mylapore’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், மயிலாப்பூர் / மந்தைவெளியில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்ய வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டருகே வந்து பணத்தை பெற்றுக்கொண்டு தேவைப்படுவோருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குகிறார்கள். ராகவேந்தரை 8610701344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இது ஒரு இலவச தன்னார்வ சேவையாகும்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…