மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் இன்று இங்கு தலா 200டோஸ் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு வந்துள்ளதாகவும், டோக்கன் கொடுக்க ஆரம்பித்த ஒருமணிநேரத்தில் அனைத்து டோக்கன்களும் தீர்ந்து போய்விடுவதாக இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி போட வருபவர்களுக்கும் இங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. தொன்னூறு சதவீதம் நபர்கள் இங்கு நேரிடியாக வந்து தடுப்பூசி போட்டு செல்வதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…