இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சபா தலைவர்கள் அனைவரும் நாரத கான சபாவில் இருந்து இதில் பங்கேற்றனர். சபா தலைவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் பின்னர் துணை குடியரசு தலைவரும் பேசினார். இந்த விழா சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த டிசம்பர் சீசன் விழாவில் சபாக்களின் கூட்டணியின் சார்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கச்சேரிகள் (வாய்ப்பாட்டு, நாமசங்கீர்தனம், டிராமா) ஆன்லைனில் ஒளிபரப்பவுள்ளனர். இந்த கச்சேரிகள் அனைத்தும் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்கள் கச்சேரிகளை பணம் செலுத்திய பிறகே ஆன்லைனில் பார்க்க முடியும். பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகள் அனைத்தும் புதிய கச்சேரிகள். கச்சேரிகள் அனைத்தும் பிரபலமான கலைஞர்களின் கச்சேரிகளே.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

13 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

24 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago