நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சபா தலைவர்கள் அனைவரும் நாரத கான சபாவில் இருந்து இதில் பங்கேற்றனர். சபா தலைவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் பின்னர் துணை குடியரசு தலைவரும் பேசினார். இந்த விழா சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த டிசம்பர் சீசன் விழாவில் சபாக்களின் கூட்டணியின் சார்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கச்சேரிகள் (வாய்ப்பாட்டு, நாமசங்கீர்தனம், டிராமா) ஆன்லைனில் ஒளிபரப்பவுள்ளனர். இந்த கச்சேரிகள் அனைத்தும் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்கள் கச்சேரிகளை பணம் செலுத்திய பிறகே ஆன்லைனில் பார்க்க முடியும். பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகள் அனைத்தும் புதிய கச்சேரிகள். கச்சேரிகள் அனைத்தும் பிரபலமான கலைஞர்களின் கச்சேரிகளே.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…