தேர்தல் 2021: சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தொடங்கியது.

நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள், போன்றவற்றை அழித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்த பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் விளம்பரத்துக்காக சுவர்களில் ஆங்காங்கே வெள்ளை அடித்து வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே தேர்தல் விளம்பரங்கள் அவர்களின் சுவர்களில் எழுதலாம்.

Verified by ExactMetrics