மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. தடுப்பூசியை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடையாள அட்டையுடன் (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இடங்கள் :
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கே.பி.தாசன் சாலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்பு இரண்டாவது தெரு, சாந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.ஏ.புரம்
இது தவிர தனியார் மருத்துவமனையான எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ ஸ்பெக்ட்ராவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…