அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. தடுப்பூசியை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடையாள அட்டையுடன் (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இடங்கள் :

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கே.பி.தாசன் சாலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்பு இரண்டாவது தெரு, சாந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.ஏ.புரம்

இது தவிர தனியார் மருத்துவமனையான எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ ஸ்பெக்ட்ராவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

2 days ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 days ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

6 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

1 week ago