அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. தடுப்பூசியை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடையாள அட்டையுடன் (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இடங்கள் :

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கே.பி.தாசன் சாலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்பு இரண்டாவது தெரு, சாந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.ஏ.புரம்

இது தவிர தனியார் மருத்துவமனையான எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ ஸ்பெக்ட்ராவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago