சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை. ஏற்கனெவே சில இடங்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நேற்று முதல் மயிலாப்பூரில் தெரு முனை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு மாட வீதியில் கற்பகம் உணவகம் அருகே தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது.
மயிலாப்பூர் வியாபாரிகள் சங்கம் இந்த தடுப்பூசி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். இங்கு பெரும்பாலான வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். காலையில் இங்கு தடுப்பூசி போட வந்திருந்த பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். அதேநேரத்தில் சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இங்கு சுமார் முந்நூறு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. இன்று காலை முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக பெரும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திருப்பூரில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நாளை முதல் அனைத்து இடங்களிலும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி எவ்வித குழப்பமும்மின்றி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…