இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று மய்யத்தில் சேர்ந்து பணியாற்றிவரும் திரு.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அவர்கள் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் அல்லாதோர் கூட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…