தேர்தல் 2021: மார்ச் 7ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று மய்யத்தில் சேர்ந்து பணியாற்றிவரும் திரு.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அவர்கள் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் அல்லாதோர் கூட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago