தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, சுமார் 11: 30 மணியளவில் ஒரு சில நபர்களே இருந்தனர். ஆனால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட 1008 சங்கு அபிஷேகம் கோவிலின் ஒரு பகுதியில் நடந்துக்கொண்டிருந்தது. இதில் மிகவும் குறைந்த அளவு மக்களே பங்கேற்றிருந்தனர்.

கோவிலுக்கு வெளியே தெற்கு மாடவீதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு ஒரு சில வணிகர்களே கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

எம்டிசி பஸ் நிறுத்தங்களில் சிலர் அமர்ந்திருப்பதைக் பார்த்தாலும், லஸ் சந்திபில் வழக்கமாக செல்லும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது..

மந்தைவெளியில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்த சில ஊழியர்களைத் தவிர்த்து மற்றபடி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று பகல் நேரத்தில் சாந்தோம், பட்டினபாக்கம் மற்றும் டாக்டர் ஆர். கே.சாலை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago