நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த நவ சுஜா கண் மருத்துவமனை இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இந்த புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கண்புரை சம்பந்தமாகவும், இதர கண் சம்பந்தமான சாதாரண சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் இருந்தால் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவமனை காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்த பின்னரே வரவேண்டும். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 4908 3500
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…