நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த நவ சுஜா கண் மருத்துவமனை இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இந்த புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கண்புரை சம்பந்தமாகவும், இதர கண் சம்பந்தமான சாதாரண சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் இருந்தால் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவமனை காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்த பின்னரே வரவேண்டும். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 4908 3500
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…