நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த நவ சுஜா கண் மருத்துவமனை இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இந்த புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கண்புரை சம்பந்தமாகவும், இதர கண் சம்பந்தமான சாதாரண சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் இருந்தால் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவமனை காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்த பின்னரே வரவேண்டும். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 4908 3500
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…