மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
சிறு வயதினருக்கு தடுப்பூசி போட அரசு ஆயத்தமாகி வரும் அதே நேரத்தில் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட மூத்தவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களான சுகாதார ஊழியர்களுக்கு ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில், தினமும் காலையில் செவிலியர்கள் பிசியாக உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 50/60 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த இடம் பரபரப்பாக இருக்கும்.
புதன்கிழமை, நாங்கள் ஆழ்வார்பேட்டை மையத்திற்கு காலை 11.30 மணியளவில் சென்றபோது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள 8 பேர் அமர்ந்திருந்தனர். தடுப்பூசியின் இரண்டு பிராண்டுகளும் இங்கு கிடைக்கிறது. ஐந்து பேர் கொண்ட ஒரு செட் இங்கே கூடிய பிறகே மருந்து பாட்டிலை திறப்பதால், மருந்து வீணாவது தவிர்க்கப்படுகிறது என்று இங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…