Categories: சமூகம்

கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சி குப்பம் போன்ற பகுதிகளில் வசித்து வரும் சுமார் முப்பது நபர்கள் ஆர்.ஏ.புரம் எம்.ஆர்.சி நகர் பகுதிகளில் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலைகளை செய்து வந்தனர். கொரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் வருமானம் இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் வருமானத்திற்க்காக புதிய சில முயற்சிகளை செய்து வருகின்றனர். ரேணுகா எம்.ஆர்.சி நகரில் வேலை பார்த்து வந்த ரேணுகா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் உள்ள ரேஷன் அரிசியை வைத்து வெளியில் இருந்து உளுத்தம் பருப்பை வாங்கி இட்லி மாவை தயார் செய்து மெரினா லூப் சாலையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு சிறிய அளவிலான வருமானம் கிடைக்கும் என்று என்று கூறுகிறார்.

இதே போல் வேறொரு பகுதியில் வசித்து வரும் அம்பிகா என்பவர் கொரியன் ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் இப்போது மாலை வேலையில் பிரிஞ்சி செய்து இங்குள்ள சாலையில் விற்பனை செய்து வருகிறார்.

இதுபோன்று இந்த பகுதியில் வசித்து வரும் பல நபர்கள் தங்களுடைய வருமானத்திற்க்காக புதிய முற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

admin

Recent Posts

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

1 week ago