மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில் காவல்துறையினருக்கு உதவியாக சில வேலைகளை செய்வதாகும்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேரத்தில் இந்த தன்னார்வ குழுவை சேர்ந்த சுமார் 12 நபர்கள், லஸ் சிக்னல் அருகே மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவிபுரிந்தனர். இந்த குழுவில் 60 வயது மதிக்கதக்க குமரேசனும் ஒருவர்.
இவர் லஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நேரு நியூஸ் மார்ட்டின் உரிமையாளர். இவர் சிறு வயது முதலே பேப்பர் போடும் தொழிலை செய்து பின்னர் நியூஸ் மார்ட் ஆரம்பித்து பிரபலமானவர். இவர் இந்த விஜிலென்ஸ் குழுவின் மூத்த உறுப்பினர், இந்த கொரோனா நேரத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, இ-பாஸ் இல்லாமல் வெளியில் செல்லாமலிருப்பது போன்றவற்றை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் சுமார் நான்கு மணி நேரத்துக்கு இந்த தன்னார்வ குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இது போன்று கபாலீஸ்வரர் கோவிலில் திருவிழா காலங்களில் இந்த தன்னார்வ அமைப்பு போலீசாருக்கு உதவிபுரியும். நீங்களும் இதுபோன்ற குழுவினருடன் இணைந்து பணியாற்றலாம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…