தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில் காவல்துறையினருக்கு உதவியாக சில வேலைகளை செய்வதாகும்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேரத்தில் இந்த தன்னார்வ குழுவை சேர்ந்த சுமார் 12 நபர்கள், லஸ் சிக்னல் அருகே மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவிபுரிந்தனர். இந்த குழுவில் 60 வயது மதிக்கதக்க குமரேசனும் ஒருவர்.

இவர் லஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நேரு நியூஸ் மார்ட்டின் உரிமையாளர். இவர் சிறு வயது முதலே பேப்பர் போடும் தொழிலை செய்து பின்னர் நியூஸ் மார்ட் ஆரம்பித்து பிரபலமானவர். இவர் இந்த விஜிலென்ஸ் குழுவின் மூத்த உறுப்பினர், இந்த கொரோனா நேரத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, இ-பாஸ் இல்லாமல் வெளியில் செல்லாமலிருப்பது போன்றவற்றை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் சுமார் நான்கு மணி நேரத்துக்கு இந்த தன்னார்வ குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இது போன்று கபாலீஸ்வரர் கோவிலில் திருவிழா காலங்களில் இந்த தன்னார்வ அமைப்பு போலீசாருக்கு உதவிபுரியும். நீங்களும் இதுபோன்ற குழுவினருடன் இணைந்து பணியாற்றலாம்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago