இரண்டாவது முறையாக கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்

கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன் செடிகளை அகற்றினர். தற்போது செடிகள் மீண்டும் வளர்ந்துள்ளதால் இரண்டாவது முறையாக செடிகளை அகற்றியுள்ளனர்.

இது தவிர குளத்தின் மூன்று முனைகளில் மழை நீரை சேமிக்கும் விதமாக குழாய் பதித்து வைத்துள்ளனர். இந்த குழாயும் சுத்தம் செய்துள்ளனர். இதன் காரணமாக மழை நீர் விரைவாக குளத்திற்கு வந்து சேரும்.

Verified by ExactMetrics